Comments (0)
|
14-Jan-10 10:26:34 AM
Comments (0)
|
02-Jan-10 4:51:43 PM
நாம் தினசரி காரியங்களில் முதுகு வலிக்கு ஆகாத பல விஷயங்களை அறியாமல் செய்கிறோம். உதாரணமாக கூன் முதுகிட்டு உட்காருவது, நடக்கும் போது கூன் போடுவது, பொருட்களை தூக்கும்போது முதுகை வளைப்பது போன்றவற்றைச் செய்கிறோம். தண்ணி வாளி, குடங்களை தூக்கும்போது, முதுகு நேராக இருப்பது அவசியம். வெயிட் அதிகமுள்ள பொருட்களை தூக்கும்போது நாம் முதுகை வளைத்தோமானால் தண்டுவடங்களுக்கு இடையிலான வட்டுக்களில் பாரம் அதிகரிக்கும். இதுதான் பிரச்சனை. உட்கார்ந்த வேலை பார்ப்பவர்களுக்கு முதுகுவலி கட்டாயம் வரும். ஏனெனில் நாம் முதுகை சற்றே வளைக்காமல் உட்கார முயற்சி செய்வதில்லை. உங்கள் தண்டுவடத்திற்கு முட்டுக் கொடுக்கும் நாற்காலிகள் தேவை. அதேபோல் தூக்கம் அவசியம் நாளொன்றுக்கு 7 மணி நேரம் தூங்குவது கட்டாயம். புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. ஏனெனில் திசுக்களுக்கு தேவையான பிராணவாயு இன்மை ஏற்படும் இதனால் முதுகுவலி சிகிச்சை பலனளிக்காமல் போய்விடும். |
18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள். அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம் கொண்டதாகவும், அதற்கேற்ற பழக்கவழக்கம் உடையதாகவும் வளருகிறது. ஆண் களைவிட பெண்களே அதிகம் கோபப்படுகிறார்கள். தனிப்பட்ட முறையில் பெரும்பாலானவர்கள் பண நெருக்கடியால் அதிகளவு கோப உணர்ச்சிக்கு தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் தனிப்பட்ட முறையில் பெரும் கோபக்காரராகவும், சமூக அமைப்பில் அதற்கு நேர்மாறாகவும் இருக்கிறார்கள். இந்த வினோதமான ஆய்வு முடிவுகள், கோபத்தைப் பற்றிய பிரபல புத்தகமான `இன்டர்நேஷனல் ஹேண்ட்புக் ஆப் ஆங்கர்' என்ற நூலின் 4-வது பாகத்தில் வெளிவர இருக்கிறது. |